ஈரோடு மாவட்டத்தில் உள்ள குறிச்சி நகர் பகுதியில் வேன் டிரைவரான சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் வேனில் ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அதே பகுதியில் வசிக்கும் மச்சேந்திரன், ராகுல் ஆகியோரும் வேனில் இருந்தனர். இந்நிலையில் ஓலப்பாளையம் பிரிவு அருகே சென்றபோது கோவை நோக்கி சென்ற கார் எதிர்ப்புற சாலையில் வந்த வேன் மீது மோதியது.

இந்த விபத்தில் காரில் வந்த சைலேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து வேனில் வந்து படுகாயமடைந்த மூன்று பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.