கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கண்ணிக்கான் கொட்டாய் பகுதியில் மங்கம்மாள்(72) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியில் இருக்கும் சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மூதாட்டி மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.