ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஓலப்பாளையம் முதல் குட்ட பாளையம் பிரிவு வரை நபார்டு திட்டத்தின் கீழ் புதிய தார் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. சுமார் 47 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள தார் சாலை பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சென்னிமலை வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் செங்கோட்டையன் தலைமை தாங்கியுள்ளார்.

இதனையடுத்து சென்னிமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் காயத்ரி இளங்கோ பங்கேற்று சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராமசுப்புரத்தினம், முருகேஷ், வார்டு உறுப்பினர்கள் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.