கரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, அமராவதி அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் ஆற்றில் உபரி நீர் முழுமையாக திறந்து விட வாய்ப்பு இருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமராவதி வடிநில உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளில் சிறுவர்கள், வாலிபர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உட்பட யாரும் இறங்கி குளிக்கவும், மீன் பிடிக்கவும், கால்நடைகளை குளிப்பாட்டவும் கூடாது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் அந்த பகுதிகளில் இருந்து வெளியேறி நிவாரண முகாம்களில் தாங்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.