கரூர் மாவட்டத்தில் உள்ள ஆர்த்தாம் பட்டி எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாய் கன்னியம்மாளுடன் மோட்டார் சைக்கிளில் சீகம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஒந்தாம்பட்டி பிரிவு அருகே சென்றபோது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதனால் படுகாயமடைந்த கன்னியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து படுகாயமடைந்த சுரேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.