கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கன்வேயர் பெல்ட் எந்திரம் எரிந்து சேதமானது. இந்நிலையில் சுரங்கம் இரண்டில் நிலக்கரி வெட்டி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட் எந்திரத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.