ஈரோடு மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம் நல்லம்மாள் நகரில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹரிச்சந்திரா பத்ரிக்கா, அவரது தம்பி உட்பட சிலர் வாடகைக்கு அறை எடுத்து தங்கி கூலி வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் மதுபோதையில் அரிச்சந்திர பத்ரிக்கா செல்போனில் யாரிடமோ நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 12:30 மணிக்கு அவரது தம்பி எழுந்து பார்த்தபோது அண்ணன் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அவரை தேடி சென்ற போது காலியாக இருந்த மற்றொரு அறையில் அரிச்சந்திர பத்ரிக்கா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.