கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முதுகுறிச்சி கிராமத்தில் துர்கேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு துர்கேஷ் உறவுக்கார பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் நடராஜ் என்பவருக்கும் துர்கேஷ் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியது. இதுகுறித்து அறிந்த துர்கேஷ் தனது மனைவியையும், நடராஜையும் கண்டித்தார்.

சம்பவம் நடைபெற்ற அன்று துர்கேஷ் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நடராஜ், அவரது நண்பரான மது உள்பட மூன்று பேர் வீச்சரிவாளுடன் வீட்டிற்குள் நுழைந்து துர்கேஷை சரமாரியாக விட்டு விட்டு தப்பி சென்றனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் துர்கேஷை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடராஜ், மது ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் துர்க்கேஷின் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.