கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசினர் பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், கிருஷ்ணகிரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து இந்த வேலை வாய்ப்பு முகாமை நடத்தியது.

இந்நிலையில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியானவர்களை தேர்ந்தெடுத்தனர். இந்த முகாமில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் எம்.எல்.ஏ கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.