ஈரோடு மாவட்டத்திலுள்ள ஏளூர் மேடு பகுதியில் ரத்தினம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மகன் பிரவீன் மருமகள் மற்றும் பேரனுடன் வருகிறார். கடந்த ஒன்றாம் தேதி வீட்டை பூட்டி விட்டு அனைவரும் வெளியே சென்றனர். மறுநாள் காலை வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ஒரு லட்ச ரூபாய் பணம், 6 பவுன் தங்க நகை ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.