தேனி மாவட்டத்தில் உள்ள கும்பக்கரை அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் சென்று ஆனந்தமாக குளித்து மகிழ்வார்கள். விடுமுறை நேரங்களில் அங்கு கூட்டம் அதிகமாக இருக்கும். கடந்து சில நாட்களாக கும்பக்கரை அருவியில் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது.

இதனால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் கடந்த 6 நாட்களாக தடை விதித்தனர். இந்நிலையில் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.