மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஏரிகள், குளங்கள் சமீபத்தில் செய்த தொடர் மழை காரணமாக நிரம்பியது. தற்போது பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டதால் சிறுவர்களும், வாலிபர்களும் குளங்கள் ஏரிகளில் குளிக்கின்றனர். இந்நிலையில் பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு படிக்கும் கார்த்திக் கருப்பு உள்ளிட்ட 3  சிறுவர்கள் மாடக்குளம் கண்மாயில் குளிக்க சென்றனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக கார்த்திக் தண்ணீரில் மூழ்கினான். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திக்கின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.