கன்னியாகுமரி டெல்லி இடையே இயக்கப்படும் திருக்குறள் அதிவிரைவு ரயில் வருகிற ஜனவரியில் இருந்து வழக்கம் போல இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, மதுரா-ஆக்ரா இடையே பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் பல்வேறு ரயில்கள் ஜனவரி மாதத்தில் ரத்து செய்யப்படுவதாக கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கன்னியாகுமரியில் இருந்து தில்லி செல்லும் திருக்குறள் அதிவிரைவு ரயில் வழக்கம்போல இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.