கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் உள்ளிட்ட பகுதியிலும் கர்நாடக மாநிலத்திலும் ஏராளமான தமிழர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் தினமும் 40,000 வாகனங்கள் இருபுறங்களிலும் கடந்து செல்கிறது.

எப்போதுமே அந்த சாலை போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். இந்நிலையில் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு ஏராளமானோர் பயணிப்பதால் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் குந்தாரப்பள்ளி பகுதி வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.