கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குடிசாதனப்பள்ளி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலாவதி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் குறைவால் பாதிக்கப்பட்ட கலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி கலாவதி  வீட்டிற்கு அருகில் இருக்கும் பாறையில் அமர்ந்திருந்தார்.

அப்போது வலிப்பு ஏற்பட்டதால் எதிர்பாராதவிதமாக கலாவதி பாறையில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே கலாவதி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.