ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆர்டி கல்லூரி வளாகத்தில் ஆர்.டி ஸ்கைநெட் என்ற மென்பொருள் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த மென்பொருள் நிறுவனத்தில் ஆர்.டி கல்லூரி மாணவ, மாணவிகளும் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் சுயமாக உருவாக்கிய மென்பொருளை சந்தைப்படுத்தி வருவாய் ஈட்டி வருகின்றனர். மேலும் மற்ற நிறுவனங்களிடமிருந்து ஆர்டர்களை பெற்று மென்பொருள்களை உருவாக்கி வருவாய் ஈட்டுகின்றனர்.

இந்நிலையில் திறமையாக உழைத்த மாணவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிற்கும் மேலான அதிநவீன ஆப்பிள் லேப்டாப்புகளை கல்லூரி நிர்வாகம் பரிசாக அளித்துள்ளது. மேலும்  திறமையான மாணவர்களுக்கு மாதம்தோறும் 30 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் வழங்குகிறது. லேப்டாப் வழங்கும் விழாவில் கல்லூரி நிர்வாக குழுவினர், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.