கரூர் மாவட்டத்தில் உள்ள தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்கள் வரலாறு காணாத மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. பெரும்பாலான பகுதிகள் துண்டிக்கப்பட்ட தீவு போல காட்சி அளித்தது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிவாரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்கனவே 21 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கரூர் தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை சார்பில் திருநெல்வேலி, தூத்துக்குடி, மாவட்டங்களுக்கு 24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 25 ஆயிரம் போர்வைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.