கரூர் மாவட்டத்திலுள்ள விஸ்வநாதபுரி, அண்ணா நகர், பசுமை நகர் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது. இந்நிலையில் பொதுமக்களுக்கு சரியாக குடிநீர் விநியோகிக்கபடவில்லை. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் கரூர்- கோவை மெயின் ரோட்டில் தண்ணீர் பந்தல் பிரிவு அருகே காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன் பிறகு பெண்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.