தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் டிச.31 வரை வாகனங்களுக்கு சுங்க கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிவாரண பொருட்கள் வழங்கப்படுவதால், பொதுமக்களுக்கு தேவையான நிவாரண பொருளை சிரமமின்றி கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

டிச.17,18 தேதிகளில் பெய்த அதிகனமழை காரணாமாக தூத்துக்குடி மாவட்டம் கடுமையான பாதிப்புகளை சந்தித்தது. தற்போது வெள்ளம் வடிந்து வருகிறது. இருப்பினும் மக்கள் பாதிப்புகளில் இருந்து மீளவில்லை.