பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாடாலூர் கிராமத்தில் முகமது சுல்தான் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் பட்டறை மற்றும் இரும்பிலான பீரோக்கள் பர்னிச்சர் உற்பத்தி செய்து பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் தொழிற்சாலையின் உட்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கடையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பெயிண்ட் மற்றும் பீரோக்கள் செய்வதற்கான மூலப் பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.