புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடியில் இருந்து திருவோணம் செல்லும் சாலையில் வாலிபர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கறம்பக்குடி செட்டி தெரு முக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் அவரது நண்பர்களான ஷேக் அப்சல், பரித் அகமது ஆகியோர் மோட்டார் சைக்கிள் சாகச டிரைவிங் செய்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மங்கள் விநாயகர் கோவில் அருகில் இருக்கும் கருணாநிதி என்பவருக்கு சொந்தமான வீட்டின் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.