திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. தற்போது உதவி வேளாண் அலுவலர் பணிக்கு 84 காலில் பணியிடங்களும், உதவி தோட்டக்கலை அலுவலர் பணிக்கு 179 காலி பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தேர்வு வருகிற பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி நடைபெற உள்ளது. எனவே திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக வருகிற ஜனவரி 4-ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது. எனவே போட்டி தேர்வுக்கு தயாராகும் நபர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்தோ அல்லது 0421-2999152, 8682066089 ஆகிய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டோ விவரங்களை அறிந்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.