திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணியூர் பகுதியில் பிரபல தனியார் பேக்கரி அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமானோர் வந்து தின்பண்டங்களை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் கடத்தூரில் வசிக்கும் தம்பதியினர் தங்களது குழந்தைகளுடன் பேக்கரிக்கு சென்று புட்டிங் கேக் ஆர்டர் செய்து அமர்ந்துள்ளனர். இதனையடுத்து கேக் வந்தவுடன் சிறுவன் கேக்கில் ஏதோ கருப்பு நிறத்தில் இருப்பதை பார்த்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளான்.

உடனே பெற்றோர் கேக்கை வாங்கி பார்த்த போது நடுவில் செய்தித்தாள் துண்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவர்கள் பேக்கரி உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சம்பந்தப்பட்ட பேக்கரியில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.