தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆலங்கோட்டை கிராமத்தில் கவி பாரதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகடார் ஏற்பட்டது. அதன் பிறகு செல்வி காணாமல் போய்விட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கவிபாரதி தனது மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்து உடலை சாக்கு முட்டையில் கட்டி புதைத்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கவிபாரதியை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த தருமபுரி மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் கவி பாரதிக்கு ஆயுள் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.