கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செறுதிக்கோணம் பகுதியில் பேபி(75) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பேபியின் கணவர் இறந்துவிட்டார். இதனால் பேபியை அவரது இளைய மகன் பராமரித்து வந்துள்ளார். நேற்று காலை வீட்டிற்கு முன்பு இருக்கும் கிணற்றில் விழுந்து பேபி தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் வலை கட்டி மூதாட்டியை பத்திரமாக மீட்டனர். அவருக்கு காயங்கள் இருந்ததால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.