திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுஆயக்குடியில் மயிலாத்தாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மதியம் மயிலாத்தாளின் வீட்டிற்கு முன்பு இருந்த வைக்கோல் படப்பு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் அருகே இருந்த கொட்டகை முழுவதும் காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாக பரவியது. இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கொட்டகை மற்றும் வைக்கோல் கட்டுகளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.