சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பகுதியில் அர்ஜூன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அர்ஜுன் தனது காரை வீட்டிற்கு முன்பு இருக்கும் மைதானத்தில் நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் மின்கசிவு ஏற்பட்டு கார் தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது.