சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கம் ஜெகநாதன் நகரில் பரத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 1 1/2 வயதுடைய ஹரிஹரன் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பரத் குமார் குளிப்பதற்காக ஒரு பாத்திரத்தில் வெந்நீர் ஊற்றி வைத்துள்ளார். அப்போது ஹரிஹரன் எதிர்பாராதவிதமாக பாத்திரம் அருகே நடந்து சென்ற போது அதை கொட்டி விட்டான்.

இதனால் வெந்நீர் கொட்டி ஹரிஹரன் வலியில் அலறி துடித்தான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஹரிஹரனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஹரிஹரன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.