கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து வீட்டில் தனியாக இருந்த சிறுமியை அவரது சித்தப்பா கவனித்து வந்ததாக தெரிகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி தூங்கி கொண்டிருந்த சிறுமையை அவரது சித்தப்பா பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, வெளியே யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து கர்ப்பமான சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமியின் சித்தப்பாவை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் சிறுமியின் சித்தப்பாவுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து …