கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமாபுரத்தில் சத்தியசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரசகுமாரன் என்ற மகன் உள்ளார். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் அரசகுமாரனுக்கு சிதம்பரத்தைச் சேர்ந்த லட்சுமி, வண்டி பாளையத்தை சேர்ந்த 31 வயது இளம்பெண் ஆகியோருடன் ஆட்டோவில் சென்று வரும் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அரச குமரனும் லட்சுமியும் இணைந்து அந்த இளம்பெண்ணை நேற்று கடலூர் ஜவான்ஸ்பவன் கட்டிடம் அருகே ஆட்டோவில் வைத்து அந்த வழியாக செல்பவரை அழைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. அவர்கள் ஒரு நபருக்கு 800 ரூபாய் வசூல் செய்துள்ளனர். இதுகுறித்து அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அரசகுமரன், லட்சுமி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை நீதிமன்றத்தில் அதிகப்படுத்தி காப்பகத்தில் ஒப்படைத்தனர்