புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நார்த்தாமலை சிவன் கோவில் தெருவில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகேசன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் தனது மனைவி ராசாத்தியுடன் நார்த்தாமலையிலிருந்து நல்லம்மாள் சத்திரத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவர்கள் அன்னவாசல்- கீழக்குறிச்சி சாலையில் உள்ள தைலமரக்காடு பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராசாத்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.