கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குறிச்சி சக்தி நகர் பகுதியில் நாகப்பாம்பு மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது. வெள்ளை நிறமாக இருக்கும் அரிய வகை நாகப்பாம்பு 5 அடி நீளம் இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வன ஆர்வலர்கள் நாகப்பாம்பை பத்திரமாக பிடித்து காட்டுப்பகுதிக்குள் விட்டனர். இதுகுறித்து வன ஆர்வலர் கூறியதாவது,அந்த பாம்பு மரபணு பிரச்சனையால் தோல் நிறமி குறைபாடு காரணமாக வெள்ளை நிறமாக தோற்றமளிக்கிறது. இதுபோன்ற வெள்ளை நாகப்பாம்புகளை பார்ப்பது மிகவும் அரிதானது என அந்த பகுதி மக்கள் கூறியுள்ளனர்.