தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் காரல் மார்க்ஸ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2011-ஆம் ஆண்டு காரல் மார்க்ஸும், தேவி என்பவரும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இதில் காரல் மார்க்ஸ் தனியார் நீட் கோச்சிங் சென்டரில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். தேவி கீரைப்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

மேலும் காரல் மார்க்ஸும், ஸ்டாலின் என்பவரும் இணைந்து சோரியம்பட்டியில் பேக்கரி நடத்தி வந்துள்ளனர். பள்ளி முடிந்து வந்ததும் தேவி பேக்கரியில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அவருக்கும் ஸ்டாலினுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. சம்பவம் நடைபெற்ற அன்று காரல் மார்க்ஸ் தேவியின் வங்கி கணக்கில் இருந்து ஏடிஎம் கார்டை பயன்படுத்தி 40 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துள்ளார்.

இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது தேவி, ஸ்டாலின், அவரது மனைவி கலையரசி, தாஜ் ஆகியோர் காரல் மார்க்சை திட்டி கத்தியால் குத்த முயன்றனர். இதுகுறித்து காரல் மார்க்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் தேவி உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.