அரியலூர் மாவட்டத்தில் உள்ள கார்குடி காலனி தெருவில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் ஆசியா என்ற பெண்ணும் காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. கடந்த 10-ஆம் தேதி இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டபோது ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொண்டனர். இதில் காயமடைந்த செல்வராஜின் தம்பி பாண்டியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் 5 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் திருமணம் செய்ததால்…. இருதரப்பினர் இடையே மோதல்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“வந்தே மாதரம், தேசிய கீதம்…. அடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து” – ஈரோடு தனியார் கல்லூரியில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து….!!
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அமைந்துள்ள பிரபல தனியார் கல்லூரியில் சிறப்பு விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தியக் குடியரசுத் துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், கல்லூரியின் புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிச் சிறப்பித்தார். குறிப்பாக, அந்த…
Read more“பெயர் வைக்க சொன்ன பெற்றோர்….” – அமைச்சரின் அடுத்த செகண்ட் ரியாக்ஷன்…. ஓசூரில் நடந்த சுவாரசிய சம்பவம்….!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ள காரப்பள்ளி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வின் போது அமைச்சர் அருண்ராஜ் நேரில் வருகை தந்து மருத்துவமனையின் உட்கட்டமைப்பு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும்…
Read more