ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் வருகிற பிப்ரவரி 27ம் தேதி நடைபெற இருப்பதால் தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்து இருக்கிறது. இதற்கிடையில் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான தங்கள்  நிலைப்பாட்டை அறிவித்து வந்த வண்ணம் இருக்கின்றன. எனினும் பாஜக இன்னும் தங்களது நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருக்கிறது.

இந்நிலையில் ஈரோட்டில் பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் பணிமனையில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் நட்டா, மாநில தலைவர் அண்ணாமலை, ஜான்பாண்டியன், தனியரசு, ஏ.சி.சண்முகம் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அதே நேரம் இபிஎஸ் தரப்பு பணிமனையில் பாஜக தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை. இதன் வாயிலாக பாஜக ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவளிக்கும் என கூறப்படுகிறது.