கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊத்தங்காலில் தனியார் அனல் மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு நிலக்கரி இருக்கும் பகுதியில் நேற்று மாலை தீ அதிகமாக எரிந்து சுவாலை மேல் நோக்கி சென்றது. அதே நேரம் 10 அடி உயரத்தில் சதீஷ், ஒப்பந்த தொழிலாளி ராஜீவ் காந்தி ஆகியோர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்கள் தங்கள் மீது தீப்பற்றி விடுமோ என்ற அச்சத்தில் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக கீழே குதித்ததால் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.