சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆ.தெக்கூர் அருகே ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அந்த வாடகை காரில் மதுரையிலிருந்து பொன்னமராவதிக்கு பயணிகள் சென்று கொண்டிருந்தனர். அந்த காரை லியாகத் அலி என்பவர் ஓட்டி சென்றார். பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் அவர் அதே காரில் மதுரை நோக்கி சென்றார். இந்நிலையில் ஆ.தெக்கூர் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி மின்கம்பத்தில் மோதியது. மேலும் கார் தலைக்குப்புற பிறகு விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் லியாகத் அலி லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

ஆனாலும் மின்கம்பம் சேதமானதால் அந்த பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தியுள்ளனர். பிறகு மின்வாரிய ஊழியர்கள் சேதமான மின் கம்பத்தை சரி செய்து மின் இணைப்பை வழங்கி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.