திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முதலைக்குளம் நடு தெருவில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் வள்ளியூர் அருகே இருக்கும் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 18-ஆம் தேதி மாணவி கல்லூரியில் விளையாட்டு போட்டியில் பங்கேற்க அழைப்பதாக தெரிவித்தார். இதனால் அதிகாலை 5 மணிக்கு ராஜகோபால் தனது மகளை பானாங்குளம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வள்ளியூர் செல்லும் பேருந்தில் ஏற்றி அனுப்பியுள்ளார்.

அதன்பிறகு மாணவி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் ராஜகோபால் தனது மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து ராஜகோபால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.