தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மணல்மேடு மகாராஜபுரத்தில் அசோக் ராஜ்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 11-ஆம் தேதி தீபாவளி பண்டிகை முன்னிட்டு சொந்த ஊரான சோழபுரத்திற்கு வந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி சொந்த வேலைக்காரமாக சிதம்பரத்திற்கு சென்ற அசோக் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இதுகுறித்து அசோக்கியின் பாட்டி பத்மினி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கடைசியாக அசோக் சோழபுரம் மணல்மேடு தெருவை சேர்ந்த சித்த வைத்தியரான கேசவ மூர்த்தியின் வீட்டிற்கு சென்றது தெரியவந்தது. அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர் போலீசாரிடம் கூறியதாவது, கடந்த 13-ஆம் தேதி இரவு அசோக் தன்னை வீட்டில் வந்து பார்த்து ஆண்மை குறைவு இருப்பதால் வாழ பிடிக்கவில்லை எனக் கூறி அழுததாக கூறியுள்ளார். இதனால் தஞ்சையில் இருக்கும் தனக்கு தெரிந்த டாக்டரை பார்க்குமாறு அவரிடம் கூறிய அனுப்பி வைத்ததாக கேசவமூர்த்தி கூறியுள்ளார். கடந்த 16-ஆம் தேதி அசோக் எழுதியதாக ஒரு கடிதம் அவரது வீட்டிற்கு வந்தது.

அந்த கடிதத்தில் தனக்கு ஆண்மை குறைவு இருப்பதாகவும், இதனால் உலகத்தில் நான் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதத்தில் இருந்த கையெழுத்து அசோக் ராஜின் கையெழுத்து இல்லை என அவரது குடும்பத்தினர் உறுதி செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில் கேசவமூர்த்தி கூறியதாவது, நான் அசோக் ராஜிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டபோது அவருக்கு ஆண்மை வீரியத்திற்காக சித்த மருந்தை கொடுத்தேன்.

அப்போது அவர் மயங்கி விழுந்து விட்டார். அவர் இறந்து விட்டதாக நினைத்து அசோக்கின் தலையை துண்டித்தேன். பிறகு உடல் மற்றும் தலையை எரித்து எனது வீட்டிற்கு பின்புறம் குழி தோண்டி புதைத்தேன் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கோட்டாட்சியர் பூர்ணிமா முன்னிலையில் அசோக் ராஜின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.