தமிழகத்தில் 16, 17 தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு இந்திய வானிலை மையமானது ஆரஞ்ச் அலெர்ட் எச்சரிக்கை கொடுத்திருக்கிறது. இந்த மூன்று பகுதிகளிலும் அடுத்த சில தினங்கள் குறிப்பாக டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மட்டும் கிட்டத்தட்ட 115.6 முதல் 205 மில்லி மீட்டர் வரையிலான மழை பதிவாகக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக தேவையான அனைத்து பாதுகாப்பு  நடவடிக்கைகளும் எடுக்கும் படியும் இந்திய வானிலை ஆய்வு மையமானது ஆனது அறிவுறுத்தி இருக்கிறது.சமீபத்தில் உருவான மிக்ஜாம் புயலானது மிகப்பெரிய வரலாறு காணாத அளவில் மழையை கொண்டு வந்தது. அதிலும் மிக முக்கியமான தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய வடக்கு மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு  ஆகிய மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தன என்பது குறிப்பிடத்தக்கது.