கடலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளைபாக்கம் காலனியில் கூலி வேலை பார்க்கும் விஜயபாரதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் கணேசன் என்பவருக்கும் வாலிபால் கம்பத்தை உடைத்து தொடர்பாக முன் விரோதம் இருந்தது. இதனால் ஏற்பட்ட தகராறில் கணேசன் உள்ளிட்ட 5 பேர் விஜயபாரதி மற்றும் அவரது நண்பர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கணேசன் உள்பட 5 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த கடலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கணேசனுக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும், 4500 ரூபாய் அபராதமும், ராஜேஷுக்கு ஆறு மாத ஜெயில் தண்டனையும் 3500 ரூபாய் அபராதமும், பழனிச்சாமி, நாகராஜ், நேரு ஆகியோருக்கு தலா 3500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.