தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெத்தனூர் கிராமத்தில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்தார். நேற்று மாலை ஆடு மேய்க்க சென்ற சிலம்பரசன் மாலை நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சிலம்பரசனை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். அப்போது பூலாப்பட்டி ஆற்றின் கரையில் ஆடுகள் மட்டும் மேய்ந்து கொண்டிருந்தது.

மேலும் ஆற்றில் சிலம்பரசனின் உடல் மிதந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிலம்பரசனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது நீச்சல் தெரியாததால் சிலம்பரசன் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என கூறியுள்ளனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.