தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மேல் எண்ட பள்ளி கிராமத்தில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் அபிநயா பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார். அவர் தன்னுடன் படிக்கும் ரங்கசாமி என்பவரை காதலித்து வீட்டிற்கு தெரியாமல் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அவரை திருமணம் செய்து கொண்டார்.

இதனையடுத்து அபிநயாவின் குடும்பத்தினர் திருமணத்தை ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபத்தில் அபிநயா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அவரை பெற்றோர் சமாதானப்படுத்தி கணவருடன் அனுப்பி வைத்தனர். நேற்று அபிநயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அபிநயாவின் பெற்றோர் அங்கு சென்று பார்த்த போது கழுத்தில் காயங்களுடன் அபிநயா இறந்து கிடந்துள்ளார். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் பேரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.