திருச்சி மாவட்டத்தில் உள்ள நெல்லிப்பட்டி பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு சிவகுமார் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிவகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடந்தது.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சிவகுமாருக்கு 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.