விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏதாநெமிலி கிராமத்தில் தேவதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜோசிகா பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். சமீபத்தில் வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் ஜோசிகா தோல்வியடைந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஜோசிகா நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ஜோசிகாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜோசிகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.