திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூர் இரண்டாவது வடக்கு தெருவில் ராமையா(90) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெசவு தொழிலாளி. இவருக்கு மாலையம்மாள்(85) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. நேற்று நீண்ட நேரமாக அவர்கள் வீட்டு கதவை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது ராமையாவும் மாலையம்மாவும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் முதுமை காரணமாக ஒரே நாளில் கணவன் மனைவி இருவரும் அடுத்தடுத்து இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர்களது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.