திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் இவரது செல்போன் எண்ணுக்கு பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த லிங்கில் சென்று நவீன் தனது சுய விவரங்கள், வங்கி கணக்குகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து நவீனை தொடர்பு கொண்டு பேசிய சிலர் ஒரு லிங்கை அனுப்பி அதில் இருக்கும் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தினால் கூடுதலாக பணம் தருவதாக தெரிவித்தனர்.

இதனை நம்பி 4 தவணைகளாக நவீன் 95 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தியுள்ளார். ஆனால் அவருக்கு பணம் திரும்ப வரவில்லை. இதுகுறித்து கேட்டபோது இன்னும் 1 1/2 லட்சம் செலுத்தினால் 3 லட்ச ரூபாய் தருகிறோம் என அவர்கள் தெரிவித்தனர். இதனால் தான் ஏமாற்றப்படுவதை அறிந்த நவீன் திருப்பத்தூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.