விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செம்மார் கிராமத்தில் அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர்களும் சென்னையை சேர்ந்த சிவா என்பவரும் உறவினர்கள் ஆவர். இந்நிலையில் மணிகண்டன் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருக்கும் பூக்கடையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று விழுப்புரத்திற்கு வந்த சிவா மணிகண்டனிடம் செலவுக்கு பணம் தருமாறு கேட்டார்.

அதற்கு மணிகண்டன் தன்னிடம் பணம் இல்லை என கூறியதால் கோபமடைந்த சிவா அவரை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். மேலும் பிளேடால் மணிகண்டனின் இடது கழுத்தில் கிழித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதனால் காயமடைந்த மணிகண்டன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.