தேனி மாவட்டத்தில் உள்ள போடி குப்பி நாயக்கன்பட்டியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற நண்பர் உள்ளார். இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அண்ணன் தம்பியான ராமன் லட்சுமணன் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் கார்த்திக் தனது வீட்டிற்கு அருகே நின்று சக்திவேலுடன் பேசிக்கொண்டிருந்தார்.

அங்கு வந்த ராமனும், லட்சுமணனும் நண்பர்களை உருட்டு கட்டையால் தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த கார்த்திக் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சக்திவேல் லேசான காயத்துடன் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அண்ணன், தம்பியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.