இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது தோனி ஐபிஎல் தொடர்களில் மட்டும் விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் .எஸ் தோனி நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் டெல்லியில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் பேருந்தில் விமான நிலையத்திற்கு சென்றனர். அப்போது அந்த பேருந்தின் ஓட்டுநர் தோனியின் தீவிர ரசிகர் என்பதால் அவரிடம் ஆட்டோகிராப் கேட்டுள்ளார். எம் எஸ் தோனியும் அவருக்கு ஆட்டோகிராப் போட்டு கொடுத்துள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.